Sunday 8 October 2017

*தமிழ் நாட்டு மௌலவிக்கூட்டங்கள்*

�� *தமிழ் நாட்டு மௌலவிக்கூட்டங்கள்*��

_இது உங்களுடைய ஈமானை சார்ந்த விஷயமாக இருப்பதால் மிக கவனமாக இந்த கட்டுரையை வாசிக்கவும்_

நாள் :- 08.10.2017

_*தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா மற்றும் ஜமாத்துல் உலமா தேர்தல் முடிவுகளும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் ஈமானும்*_

��அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வதும் அல்லாஹ்வுக்காக பகைமை கொள்வதும் , *ஈமானை பாதுகாக்கும் விஷயமாகும்* என்று ஒரு முக்கியமான நபி மொழியை ஸஹீஹுல் புகாரியில் காணலாம்.

அப்போது அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களையும் இழிவுபடுத்தியவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளே  !  அப்போது அவர்களை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஆதரிப்பவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரிகளே  !  இது ஈமானின் அடிப்படை கொள்யாகும் என்பதை தொன்றுதொட்டே மார்க்க அறிஞர்கள், இமாம்கள், இறைநேசர்கள் குர்ஆனைக்கொண்டும் ஹதீஸ்களைக்கொண்டும் 1400 வருடமாக சொல்லிவருகிறார்கள்.
*அந்த ஈமானிய கொள்கையை மனதில் உறுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த கட்டுரை*

இன்று நம்மிடையே இருந்துகொண்டிருக்கும்
சில மௌலவிகள்  பல பள்ளிகளிலும் பல மதரஸாக்களிலும் ஜமாத்துல் உலமாவிலும் இருக்கிறார்கள். தான் ஸுன்னத் ஜமாஅத் கொள்கையுடையவன் என்று மக்களிடையே சொல்லிக்கொண்டு காணப்படுகின்றனர்  ! 

மாற்றுக்கொள்கைகளைப் பற்றி இவர்களிடம் விசாரித்தால் சிலர் TNTJ மற்றும் பீ ஜே பற்றி மட்டும் கடுமையாக விமர்சிக்கின்றனர். மற்று சிலர் அதைப்பற்றி கூட தன்னுடைய நிலைபாட்டை மக்களிடம் சொல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

*மௌலவிகளிலேயே மிக அபாயமான வேறொரு கூட்டம் இருக்கிறது  !*

இந்த மௌலவிக்கூட்டம் எப்படியென்றால் அவர்கள் பணி புரிந்து வரும் பள்ளிகளில் மத்ரஸாக்களில் ரபீஉல் அவ்வல் 12 நாள் மட்டும் மௌலூத் ஓதி நாடகமாடும் கூட்டம். இவர்களில் சிலர் அவ்வப்போது நான் நான் நாகூருக்கு சென்றேன் ,  முத்துப்பேட்டை தர்கா உரூஸுக்கு சென்றேன் என்று ஏதாவது ஒன்றை சொல்லிவருவதையும் பார்க்கலாம்.

ஆனால் இவர்கள் தான் எல்லோரையும் விட மிக பெரிய நயவஞ்சகர்கள். ஏனென்றால் ஒரு பக்கம் மீலாது உரூஸ் எல்லாம் கொண்டாடுவார்கள், அதே நேரத்தில் நமது கண்மணி நாயகம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களையும் அல்லாஹ்வையும் இழிவு படுத்தியோரையும், மீலாது மௌலிது மற்றும் உரூஸ் இதெல்லாம் ஷிர்க் பித்அத் என்று பல முறை தீர்ப்பு வழங்கிய வழிகெட்ட தேவ்பந்து மத்ரஸாவையும் அந்த வழிகெட்ட தேவ்பந்து கொள்கைகளையும் அதன் ஸ்தாபக மௌலவிக்கூட்டத்தையும் மறைமுகமாக மறைமுகமாக மறைமுகமாகவோ நேரடியாகவோ வெளிப்படையாகவோ ஆதரிப்பவர்கள். இன்றைய தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமாவிலும் ஏனைய மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைகளிலும் இவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இவர்களில் பலர் ஸுன்னத் ஜமாஅத் அமைப்புகளை நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.( குறிப்பு :- ஸுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்த உடனேயே விபரமறியாத பாமர மக்கள் அதில் சிக்கிவிடுவதால் இவர்கள் இந்த சூட்சியை கைய்யாளுகிறார்கள்)

*இவர்களை கண்டுபிடிக்க ஒரே வழி இதுதான்  !  இந்த மௌலவிக்கூட்டத்திடம் இந்த கேள்வியை கேட்டுபாருங்கள்  !!!*

_*முதல் கேள்வி :-*_
அல்லாஹுவையும் அவனுடைய ரஸூலையும் இழிவு படுத்திய TNTJ ஸ்தாபகர் பீஜே வைப்பற்றி நமது நிலைபாடு என்ன  ? இதற்கு அவர்களுடைய பதில் - _"பீஜே முர்த்தத் ஆகிவிட்டான் என்று தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தீர்ப்பளித்திருக்கிறது"_ என்று பதிலளிப்பார்கள்.
(பதிலளிக்காமல் மழுப்பக்கூடியவர்களும் இருப்பார்கள், கேள்வியை கேட்பவர் கவனமாக இருக்கவேண்டும்)

*துடர்ந்து 2வது கேள்வி  :-*அல்லாஹுவையும் அவனுடைய ரஸூலையும் இழிவு படுத்தியது மட்டுமின்றி மீலாது மௌலிது, தாஜுஸ்ஸலவாத்து, உரூஸ் தபரூக் போன்ற ஏனைய ஸுன்னத் ஜமாஅத்தின் செய்பாடுகளையெல்லாம் பித்அத் என்று கூறுவதோடு இஸ்லாத்தை ஒழிப்பதற்க்காக முழு மூச்சுடன் செயல்பட்டு வஸீலா தேடுபவர்களையெல்லாம் காஃபிர் என்று சொல்லி வலீமார்கள் கபருகளை ஜியாரத்து செய்வோரை சிலைவணங்கிகள் என்று தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தம் ஸாலிஹீன்களை கொலைசெய்த இப்னு அப்துல் வஹாப் நஜ்தியை மிக நல்லவர், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று புகழ்ந்து துஆவை கூட செய்யும் தேவ்பந்திய ஸ்தாபகர்களான
1.மௌலவி காஸிம் நாநூத்தவி,
2.மௌலவி கலீல் அஹமது அம்பேட்டவி
3.மௌலவி ரஷீத் அஹமது கங்கோஹி
4.மௌலவி அஷ்ரஃப் அலீ தானவீ
5.மௌலவி இலியாஸ் காந்தலவி
6.மௌலவி ஜகரியா காந்தலவி
7. இந்த 6 மௌலவிகளையும் ஆதரிக்கும் தேவ்பந்து கொள்கை கூட்டத்தைப்பற்றி  உங்களுடைய நிலைபாடு என்ன  ?  என்று கேட்டு பாருங்கள்  !!! 

இந்த 2வது கேள்வியை இந்த மௌலவிக்கூட்டத்திடம் கேட்டு , தன் பெயரையும் மொபய்ல் நம்பரையும் சொல்லி ஒரு ஒலி பதிவு (Audio recording) தர சொல்லுங்கள்  ? 

இவர்களில் மிகவும் அபாயகரமான சிலர் சொல்லும் பதில் - அல்லாஹ்வையும் ரஸூலையும் இழிவுபடுத்திய யாராக இருந்தாலும் காஃபிர் தான், பீஜே காஃபிர் தான்
என்றெல்லாம் பொதுப்படையாக ஓங்கிய குரலில் இவர்கள் சொல்லுவதை பார்க்கலாம் -

*அதே நேரத்தில் உடனே மறு கேள்வியை கேட்டு பாருங்கள்*  - மௌலவி காஸிம் நாநூத்தவி, மௌலவி கலீல் அஹமது அம்பேட்டவி, மௌலவி ரஷீத் அஹமது கங்கோஹி, மௌலவி அஷ்ரஃப் அலீ தானவீ , மௌலவி இலியாஸ் காந்தலவி, மௌலவி ஜகரியா காந்தலவி, இந்த 6 மௌலவிகளையும் ஆதரிக்கும் தேவ்பந்து கொள்கை கூட்டத்தைப்பற்றி உங்ளுடைய நிலைபாடு என்ன  ??

இந்த மறு கேள்வியை அவர்களிடம் கேட்கப்பட்டால் இந்த மௌலவிக் கூட்டம் தெறிதெறிக்க ஓடுவதை பார்க்கலாம்.
_(பதிலளிக்காமல் மழுப்பக்கூடியவர்களும் இருப்பார்கள், கேள்வியை கேட்பவர் கவனமாக இருக்கவேண்டும்)_

*ஸுன்னத் ஜமாஅத்தின் கொடிய எதிரிகள் இவர்கள் தான்*

ஒரு பக்கம் மௌலிது மீலாது உரூஸ் கொண்டாடுவார்கள், ஆனால் மறுபக்கம் அல்லாஹ் ரஸூலையும் இழிவுபடுத்தியவர்களையும் மௌலிது மீலாது ஷிர்க் பித்அத் என்று சொல்லும் தேவ்பந்து கூட்டத்தையும் கண்ணியப்படுத்துவார்கள்.

*இன்றைய தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா கூட்டமும் இதை சார்ந்தது தான்  !!*

_சந்தேகமாக இருக்கிறதா  ??_

*மேற்கூறியவாறு கேள்விகளை கேட்டு தெளிவு பெறுங்கள், உங்களுடைய ஈமான் உங்களுக்கு முக்கியம், உங்களைப்பற்றி அல்லாஹ் என்ன நினைக்கிறான் என்று பாருங்கள், அந்த மௌலவிக்கூட்டம் என்ன நினைக்கிறது என்று பார்க்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் ஈமானை மறுபரிசீலனை செய்ய நேரம் ஆகிலிட்டது  ! ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள்.*