Thursday 13 October 2016

"நபிமார்கள் தமது கப்ரிலே உயிருடன் உள்ளனர்.

عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اﷲِ صلي الله عليه وآله وسلم : الْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُوْرِهِمْ يُصَلُّوْنَ

ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகள் கூறினார்கள்:
"நபிமார்கள் தமது கப்ரிலே உயிருடன் உள்ளனர். அவர்கள் தொழுது கொண்டுள்ளனர்"

 பைஹகீயின் ஹயாத்துல் அன்பியா, முஸ்னத் அபீ யஃலா
 ► இந்த ஹதீத் ஸஹீஹ் என இமாம் பைஹகி (رحمه الله) கூறியதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி  (رحمه الله) அவர்கள் தமது ஃபத்ஹ் அல்-பாரியில் தெரிவிக்கிறார்.

மேலும் தப்ஸீருடைய இமாம்கள் இந்த குர்ஆன் வசனத்தை (4:64) ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகளுடைய வாழ் நாளில் மட்டும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்றாக கருதவில்லை. மாறாக அவர்களுடைய வபாத்தின் பின் அவர்களுடைய கப்ர் வாழ்க்கையிலும் இவ்வசனம் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்று என்பதே இமாம்களின் நம்பிக்கையாக இருந்தது. இமாம் இப்னு கதீர் (رحمه الله) தமது தப்ஸீரிலே இந்த ஆயத்துக்கு விளக்கமளிக்கையில் பின்வரும் உத்பீயின் சம்பவத்தை குறிப்பிடுகிறார்:

وقد ذكر جماعة منهم الشيخ أبو منصور الصباغ في كتابه الشامل الحكاية المشهورة عن العتبي قال كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم فجاء أعرابي فقال السلام عليك يا رسول الله سمعت الله يقول ولو أنهم إذ ظلموا أنفسهم جاؤك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ثم أنشأ يقول يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم ثم انصرف الأعرابي فغلبتني عيني فرأيت النبي صلى الله عليه وآله وسلم في النوم فقال يا عتبي إلحق الأعرابي فبشره أن الله قد غفر له

பலர் இச்சம்பவத்தை அறிவித்துள்ளனர். அவர்களில் ஒருவரான அஷ்-ஷெய்கு அபூ மன்ஸூர் அஸ்-ஸப்பாங்  தனது நூலான அஷ்-ஷாமிலில் பின்வரும் பிரபலமான ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.

உத்பீ கூறுகிறார்:
"நான் நாயகம் (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ர்  அருகே அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வருகை தந்த அரபி ஒருவர்:

"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ் ,"அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்." (4:64) என கூறுவதாக நான் கேட்டிருக்கிறேன்.ஆகையால் நான் உங்களிடம் எனது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும், என்னுடைய இறைவனிடத்தில் உங்களுடைய ஷபாஅத்தை வேண்டியவனாகவும் வந்துள்ளேன்"  என்று கூறினார்.

பின்பு அந்த  அரபி (ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) வை புகழ்ந்து சில கவி வரிகளை பாடிவிட்டு) சென்று விட்டார்.இச்சம்பவம் நடந்து முடியும்போது நான் உறங்கிவிட்டேன். அப்போது ரசூல் (صلى الله عليه وسلم)  அவர்களை கனவில் கண்டேன். நபியவர்கள் என்னை நோக்கி "அந்த அரபியியை சந்தித்து அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்ற நற்செய்தியை எத்தி வையுங்கள்" என்று கூறினார்."

(தப்ஸீர் இப்னு கதீர்)

இமாம் இப்னு கதீர்  (رحمه الله),  ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) வபாத்தான பின்பும் அவரிடம் அவரின் ஷபாஅத்தை வேண்டலாம் என மேலே தெளிவாக கூறியுள்ளதை அவதானிக்கவும்.   

ஸூரா அன்-னிஸா 64ம் ஆயத்துக்கு விளக்கமாக உத்பீயின் இந்த சம்பவத்தை அல்லது அதற்கு ஒத்த நிகழ்வுகளை தமது தப்ஸீர்களில் குறிப்பிட்ட இமாம்களில் சிலர்:

இமாம் இப்னு கதீர் (رحمه الله) தமது தப்ஸீருல் குர்ஆனில் கரீம் இமாம் த'லாபி (رحمه الله) தமது தப்ஸீரில் இமாம் நஸஃபி. (رحمه الله) தமது தப்ஸீரில் இமாம் அல்-குர்தூபி (رحمه الله) தமது அல்-ஜாமிஉ லில் அஹ்காமில் குர்ஆன்  
இமாம் அபூ ஹய்யான் அல்-அன்தலூஸி (رحمه الله) தமது தப்ஸீரில்
ஒரு ஆயத்துக்கு  ஒரு குறித்த இமாமின் விளக்கவுரை என்பது அவரது சொந்த அகீதாவின் பிரதிபலிப்பு. அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாவை சேர்ந்த  இமாம்கள் இந்த ஆயத்தை (4:64) எவ்வண்ணம் விளங்கி உள்ளனர் என இதிலிருந்து தெளிவு பெறலாம்.இந்த ஆயத்தானது பாவம் செய்கிற அத்தனை மனிதர்களுக்கும்எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை "உத்பீயின் சம்பவத்தை" அல்லது அதற்கு ஒத்த நிகழ்வுகளை இந்த ஆயத்துக்கு விளக்கமாக தலை சிறந்த இமாம்கள் குறிப்பிட்டிருப்பதில் இருந்து விளங்கி கொள்ளலாம்.

இப்னு கதீர் (رحمه الله) இது மிகவும் பிரபல்யமான ஒரு சம்பவம் என கூறுகிறார்.ஷிர்க்கை ஆதரிக்கும் ஒரு சம்பவம் எப்படி இஸ்லாம் வேரூன்றி இருந்த அந்த பொற்காலத்தில் பிரசித்தம் அடைந்தது? இந்த தப்சீர்கள் தவிர உத்பீயின் சம்பவம் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாவை சேர்ந்த வேறு பல பிரபல இமாம்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில:
இமாம் நவவி (رحمه الله) இன் அத்கார்இமாம் இப்னு குதாமா (رحمه الله) இன் முங்னிஇமாம் சுயூதீ (رحمه الله) இன் தப்ஸீர் துர்ருல் மன்தூர்இமாம்  இப்னு அஸாகீர் (رحمه الله) இன் தாரீக்இமாம் தகியுத்தீன் அஸ்-ஸுப்கீ (رحمه الله) இன் ஷிபாஉஸ் ஸிகாம்இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ (رحمه الله) இன் அல்-ஜவ்ஹர்  இமாம் நவவி (رحمه الله) அவர்கள் சம்பவத்தை "ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم)வின் கப்ரை தரிசித்தலும் அதன் திக்ருகளும் " என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளார்.
மேலும் இமாம் இப்னு குதாமா (رحمه الله) முங்னியில் இச்சம்பவத்தை "நபியின் கப்ரை தரிசித்தல் " எனும் பாடத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்.

எல்லாம் வல்ல இறைவன் அவனின் திருத்தூதரின் ஷபாத் மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஈடேற்றம் அடையும் கூட்டத்தில் எம்மை ஆக்கி வைப்பானாக!